திருப்பூரில் போலி ஆவணம் மூலம் மோசடி செய்ய முயன்றதாக 2 வழக்கறிஞர்களை சிபிசிஐடி போலீசார் கைது

திருப்பூர் : திருப்பூரில் போலி ஆவணம் தயாரித்து சொத்துகளை மோசடி செய்ய முயன்றதாக வழக்கறிஞர்கள் 2 வரை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருப்பூர் : திருப்பூரில் போலி ஆவணம் தயாரித்து சொத்துகளை மோசடி செய்ய முயன்றதாக வழக்கறிஞர்கள் 2 வரை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் மதியழகன், இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தனது தந்தை பெயரில் திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்த சொத்துகளை கர்நாடக சிவில் நீதிமன்ற உத்தரவு போல் போலி ஆவணங்கள் தயாரித்து சிலர் அபகரித்து உள்ளதாகவும், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். 

அவரின் புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு, இந்த வழக்கு திருப்பூர் சிபிசிஐடி வசம் விசாரணைக்கு வந்தது. வழக்கில் தொடர் விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி போலீசார் இது தொடர்பாக தாராபுரத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ராமசாமி (78), அவரது உதவி வழக்கறிஞர் ஜனார்த்தனன்(34) ஆகியோரை நேற்று கைது செய்தனர். 

இது குறித்து சிபிசிஐடி போலீசார் கூறும் போது: 

இந்த விஷயம் தொடர்பாக முதற்கட்டமாக வழக்கறிஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆஜர்படுத்தப்பட்டவர்களில் ராமசாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...