13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 108 அவசர ஊர்தி ஓட்டுனர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை : 2019ம் ஆண்டிற்கான ஊதிய உயர்வை வழங்காத ஜிவிகே ஒப்பந்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓராண்டுக்கு மேல் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும், 12 மணி நேரமாக இருக்கும் வேலை நேரத்தை எட்டு மணி நேரமாக குறைக்க வேண்டும், பெண் ஊழியர்களுக்கு 26 வாரம் பேறுகால விடுப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பதிமூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் இணைப்பு (தொமுச) பேரவை சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை : 2019ம் ஆண்டிற்கான ஊதிய உயர்வை வழங்காத ஜிவிகே ஒப்பந்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓராண்டுக்கு மேல் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும், 12 மணி நேரமாக இருக்கும் வேலை நேரத்தை எட்டு மணி நேரமாக குறைக்க வேண்டும், பெண் ஊழியர்களுக்கு 26 வாரம் பேறுகால விடுப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பதிமூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் இணைப்பு (தொமுச) பேரவை சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில தலைவர், இருளாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர், செய்தியாளர்களிடம் கூறுகையில் "இரவு பகல் பாராமல் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என மனப்பான்மையுடன் அயராது உழைத்து வரும் 108 அவசர ஊர்தி ஓட்டுனர்களின் நியாமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்", என வேண்டுகோள் விடுத்தனர்.

ஜிவிகே இ.எம்.ஆர்.ஐ நிர்வாகமானது ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை திணிப்பதை தவிர்த்து மக்கள் சேவையில் அக்கறை செலுத்த வேண்டும், எனவும் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்ட தலைவர் பொய்யாமொழி, செயலாளர் குணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...