தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எம்எல்ஏ அம்மன் அர்ஜுனனை நேரில் சந்தித்த முதல்வர்

கோவை : கோவை தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் உடல் நல குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதையடுத்து, அவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.


கோவை : கோவை தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் உடல் நல குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதையடுத்து, அவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் கோவையில் உள்ள குப்புசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 



இந்நிலையில், இன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனனை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பின்போது அமைச்சர் எஸ் பி வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இப்படியிருக்க அம்மன் அர்ஜுனனின் உடல் நலம் தேறி வருவதையடுத்து அவர் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...