கோவை : "நாட்டின் பொருளாதாரம் இருண்ட பாழும் கிணற்றில் தள்ளப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை", என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர், நெல்லை முபாராக் கோவையில் தெரிவித்தார்.
கோவை : "நாட்டின் பொருளாதாரம் இருண்ட பாழும் கிணற்றில் தள்ளப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை", என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர், நெல்லை முபாராக் கோவையில் தெரிவித்தார்.
கோவை உக்கடம் பகுதியில் செய்தியாளர் சந்திப்பில், அவர் நாட்டில் பல்வேறு தொழில்கள் நலிவடைந்து வருவது பொருளாதார வீழ்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளது, என கூறினார்.
மேலும் கூறுகையில், பொருளாதார வீழ்ச்சியை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமென தெரிவித்த அவர், இக்கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்த உள்ளதாகவும் அறிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, தகில் ராமணி பணியிடமாற்றம் விவகாரத்தில் மத்திய அரசின் அழுத்தங்கள் இருப்பதாகவும், இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் கவுன்சிலிங் காரணமாக கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அதனால் அதை திரும்ப பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நெல்லை முபாரக் தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சரின் வெளிநாடு பயணம் வரவேற்கதக்கது எனவும் அதன் மூலம் முதலீடுகள் தமிழகத்திற்கு வர வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
கோவை உக்கடம் பகுதியில் செய்தியாளர் சந்திப்பில், அவர் நாட்டில் பல்வேறு தொழில்கள் நலிவடைந்து வருவது பொருளாதார வீழ்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளது, என கூறினார்.
மேலும் கூறுகையில், பொருளாதார வீழ்ச்சியை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமென தெரிவித்த அவர், இக்கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்த உள்ளதாகவும் அறிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, தகில் ராமணி பணியிடமாற்றம் விவகாரத்தில் மத்திய அரசின் அழுத்தங்கள் இருப்பதாகவும், இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் கவுன்சிலிங் காரணமாக கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அதனால் அதை திரும்ப பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நெல்லை முபாரக் தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சரின் வெளிநாடு பயணம் வரவேற்கதக்கது எனவும் அதன் மூலம் முதலீடுகள் தமிழகத்திற்கு வர வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.