கோவை : கோவை ஈச்சனாரி அருகே சமையல் தொழிலாளியின் இருசக்கர வாகனத்தை திருடி கேரளாவில் விற்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவை : கோவை ஈச்சனாரி அருகே சமையல் தொழிலாளியின் இருசக்கர வாகனத்தை திருடி கேரளாவில் விற்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாலுசாமி (46).இவர் சமையல் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் புதிதாக இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த நிலையில் இவர் பணிநிமித்தம் காரணமாக ஈச்சனாரி அருகே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சென்றுள்ளார் .
பின்னர், திரும்பி வந்து பார்த்த போது சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து பாலுசாமி போத்தனூர் காவல் நிலையில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டதில் கேரளா மாநிலம் கொழிஞ்சாபாறையை சேர்ந்த சாஜகான் (22) என்ற இளைஞர் இரு சக்கர வாகனத்தை திருடி, அதை கேரளாவில் விற்க முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அதிரப்பள்ளி பால்ஸ் போலீஸார் வாகன சோதனையின் போது சாஜகானை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர் போத்தனூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
இதில் சாஜகான் மீது ஏற்கனவே கேரளாவில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், கோவையில் இருந்து இரு சக்கர வாகனங்களை திருடி சென்று கேரளாவில் விற்பனை செய்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாலுசாமி (46).இவர் சமையல் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் புதிதாக இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த நிலையில் இவர் பணிநிமித்தம் காரணமாக ஈச்சனாரி அருகே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சென்றுள்ளார் .
பின்னர், திரும்பி வந்து பார்த்த போது சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து பாலுசாமி போத்தனூர் காவல் நிலையில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டதில் கேரளா மாநிலம் கொழிஞ்சாபாறையை சேர்ந்த சாஜகான் (22) என்ற இளைஞர் இரு சக்கர வாகனத்தை திருடி, அதை கேரளாவில் விற்க முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அதிரப்பள்ளி பால்ஸ் போலீஸார் வாகன சோதனையின் போது சாஜகானை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர் போத்தனூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
இதில் சாஜகான் மீது ஏற்கனவே கேரளாவில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், கோவையில் இருந்து இரு சக்கர வாகனங்களை திருடி சென்று கேரளாவில் விற்பனை செய்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.