கோவை : ஒரு ரூபாய் இட்லி கொடுத்து மக்களுக்கு சேவையாற்றி வரும் கமலாத்தா பாட்டியை நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட ஆட்சியர் ராசாமணி, பாட்டிக்கு பாரதப்பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கோவை : ஒரு ரூபாய் இட்லி கொடுத்து மக்களுக்கு சேவையாற்றி வரும் கமலாத்தா பாட்டியை நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட ஆட்சியர் ராசாமணி, பாட்டிக்கு பாரதப்பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கமலாத்தாள். 85 வயதான கமலாத்தாள் தனது முதுமைப்பருவத்திலும் அப்பகுதியில் கடந்த 30 வருடங்களாக குறைந்த விலைக்கு இட்லி கொடுத்து வருகிறார். ஒரு ரூபாய் இட்லி பாட்டி என்றால் உலகமே அறியும் அளவுக்கு கமலாத்தாள் பாட்டியின் புகழ் பரவியுள்ளது.

சூரியன் உதிப்பதற்கு முன் அன்றைய வேலையை தொடங்கி, அதிகாலை 6 மணிக்கெல்லாம் இட்லி தயார் செய்து கொடுக்கும் கமலாத்தாள் பாட்டிக்கு, வடிவேலம்பாளையத்தை சுற்றி, ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே ரசிகர்கள்.

கடந்த 30 வருடங்களாக குறைந்த விலைக்கு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் பாட்டி, முதல் 10 வருடங்கள் இட்லி 50 பைசாவுக்கும், அதன் பிறகு 20 வருடங்களாக 1 ரூபாய்க்கும் இட்லி கொடுத்து வருகிறார். தேக்கு இலையில் இட்லி கொடுத்து, காலை உணவளிக்கும் கமலாத்தாள் பாட்டியின் கடைக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் உணவருந்த வருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலான ஒரு ரூபாய் இட்லி கமலாத்தாள் பாட்டியை நேரில் அழைத்து பாராட்டிய, மாவட்ட ஆட்சியர் கு ராசாமணி அவரது சேவைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, பாரதப்பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கமலாத்தா பாட்டிக்கு வீடு கட்டித்தரப்படும் என்று தெரிவித்தார். மேலும், பாட்டிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக கூறினார்.
இந்நிலையில், கடந்த பொங்கலன்று வடிவேலம்பாளையத்தில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் ஓடி முதல் பரிசை தட்டிச்சென்ற கமலாத்தா பாட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.