கோவையில் மது போதையில் இளம் பெண்ணை துரத்தி சென்று ஆபாசமாக பேசிய காவலர் இடைநீக்கம்

கோவை : கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே மது போதையில் இளம் பெண்ணை துரத்தி சென்று, ஆபாசமாக பேசிய விவகாரத்தில் காவலரை இடைநிறுத்தம் செய்து அவர்மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.


கோவை : கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே மது போதையில் இளம் பெண்ணை துரத்தி சென்று, ஆபாசமாக பேசிய விவகாரத்தில் காவலரை இடைநிறுத்தம் செய்து அவர்மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி குமார் (37). இவர் அதே பகுதியில் உள்ள வன்னியன் கோவில் அருகே சிறு தொழிற்சாலை(லேத்) நடத்தி வருகிறார். இவரது மனைவி சரண்யா நேற்று மதியம் கீரணத்தம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அத்திப்பாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை தாண்டும் போது சீருடையில் இருந்த காவலர் ஒருவர் அவரைப் பின்தொடர்ந்து உள்ளார். இதனை கண்டு, அதிர்ச்சி அடைந்த சரண்யா பயத்தில் வேகமாக சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து காவலர் சரண்யாவை வழிமறித்து ஆபாசமாக வர்ணித்துள்ளார். இதையடுத்து பயந்து போன சரண்யா அங்கிருந்து தப்பித்து அத்திப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஃபேன்சி ஸ்டோரில் தஞ்சமடைந்தார். பின்னர் ஃபேன்சி ஸ்டோருக்கும் காவலர் தொடர்ந்து வர சரண்யா தனது கணவருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தார். 

இதையடுத்து ஒன்று கூடிய பொதுமக்கள் மற்றும் சரண்யாவின் உறவினர்கள் காவலரை சுற்றி வளைத்தனர். அப்போது அவர் மது போதையில் இருந்தது தெரியவந்ததை அடுத்து பொதுமக்கள் காவலரை சிறைபிடித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காவலர் பெயர் பிரபாகரன் என்பதும் இவர் காவல்துறை கண்காணிப்பாளரின் ஓட்டுநர் என்பதும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் மீது கோவில்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை இடைநீக்கம் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...