நீலகிரியில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் திருவிழா கோலாகல கொண்டாட்டம்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், பல்வேறு மலையாள அமைப்புகள் சார்பில் ஓணம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.


நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், பல்வேறு மலையாள அமைப்புகள் சார்பில் ஓணம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கேரளாவில் ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கேரளா மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள, நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற பகுதிகளில் உள்ள மலையாள மக்கள் வெகுவிமர்சையாக ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தனியார் கல்லூரிகளில் கடந்த இரண்டு நாட்களாக மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



இதே போன்று இன்று ராணுவ முகாம், ரயில் நிலையம், கேரளா சமாஜம் சார்பில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அத்தப்பூ கோலமிட்டு ஓரே மாதிரியான வண்ண உடையணிந்து, செண்டை மேளத்திற்கு ஏற்ற நடனம் ஆடி ஓணம் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடினர்,



இந்த கொண்டாட்டத்தில் சுற்றுலா பயணிகளும் பங்கேற்று, பூக்கோலம் முன்னின்று புகைப்படங்கள் எடுத்து சென்றனர். தொடர்ந்து, 'ஒண சத்யா' எனப்படும் விருந்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...