கோவை : சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் தடுக்கும் கேரள அரசை கண்டித்து கோவை காந்திபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழகம் முன்பாக கேரள பேருந்துகளை மறிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தபெதிக உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கோவை : சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் தடுக்கும் கேரள அரசை கண்டித்து கோவை காந்திபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழகம் முன்பாக கேரள பேருந்துகளை மறிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தபெதிக உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கேரளாவில் கடந்த இரண்டுகளாக மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. இதனையடுத்து கேரளாவில் உள்ள அணைகளின் நீர்மட்டத்தை பாதுகாப்பு காரணங்களுக்காக 5 அடி குறைவாகவே வைத்திருக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் சிறுவாணி அணையின் நீர் மட்டம் 42 அடியாக இருக்கும் நிலையில், அணையின் நீர் மட்டத்தை உயர விடாமல் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதையும் கேரள அரசு ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகின்றது. கோவை மக்களின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் தடுக்கும் கேரள அரசை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள்,திராவிடர் தமிழர் கட்சி உட்பட பல்வேறு அமைப்பினர் கோவை காந்திபுரம் விரைவு போக்குவரத்து கழகம் முன்பாக கேரள பேருந்துகளை தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து விரைவு போக்குவரத்து கழகத்தின் இரு வாயில்களிலும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டனர். கேரள பேருந்துகளை தடுத்து நிறுத்து வந்த தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் தமிழர் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களை தடுத்து நிறுத்தவே பேருந்து நிலையம் முன்பாக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது 50 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையில் 45 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேக்கமுடியும் என்ற கேரள அரசின் உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீர்மட்டம் குறைக்கப்பட்டால் கோவை மக்களுக்கு குடிநீர் பிரச்சினைகள் ஏற்படும் எனவும் 50 அடிக்கு தண்ணீர் தேக்குவது தமிழக அரசின் உரிமை எனவும் அதை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும், கேரளாவில் உள்ள மலம்புழா போன்ற அணைகளில் அணையின் முழு கொள்ளவை தேக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் தமிழகத்தில் உற்பத்தியாகி கேரளாவில் பயணித்து மீண்டும் தமிழகத்திற்கே வரும் சிறுவாணி தண்ணீரை அணையில் தேக்கவிடாமல் தடுப்பது தவறானது எனவும் சிறுவாணி அணையில் 50 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்க கேரள அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து கேரள பேருந்துகளை முற்றுகையிட முயன்ற 50க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.


கேரளாவில் கடந்த இரண்டுகளாக மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. இதனையடுத்து கேரளாவில் உள்ள அணைகளின் நீர்மட்டத்தை பாதுகாப்பு காரணங்களுக்காக 5 அடி குறைவாகவே வைத்திருக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் சிறுவாணி அணையின் நீர் மட்டம் 42 அடியாக இருக்கும் நிலையில், அணையின் நீர் மட்டத்தை உயர விடாமல் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதையும் கேரள அரசு ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகின்றது. கோவை மக்களின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் தடுக்கும் கேரள அரசை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள்,திராவிடர் தமிழர் கட்சி உட்பட பல்வேறு அமைப்பினர் கோவை காந்திபுரம் விரைவு போக்குவரத்து கழகம் முன்பாக கேரள பேருந்துகளை தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து விரைவு போக்குவரத்து கழகத்தின் இரு வாயில்களிலும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டனர். கேரள பேருந்துகளை தடுத்து நிறுத்து வந்த தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் தமிழர் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களை தடுத்து நிறுத்தவே பேருந்து நிலையம் முன்பாக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது 50 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையில் 45 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேக்கமுடியும் என்ற கேரள அரசின் உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீர்மட்டம் குறைக்கப்பட்டால் கோவை மக்களுக்கு குடிநீர் பிரச்சினைகள் ஏற்படும் எனவும் 50 அடிக்கு தண்ணீர் தேக்குவது தமிழக அரசின் உரிமை எனவும் அதை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும், கேரளாவில் உள்ள மலம்புழா போன்ற அணைகளில் அணையின் முழு கொள்ளவை தேக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் தமிழகத்தில் உற்பத்தியாகி கேரளாவில் பயணித்து மீண்டும் தமிழகத்திற்கே வரும் சிறுவாணி தண்ணீரை அணையில் தேக்கவிடாமல் தடுப்பது தவறானது எனவும் சிறுவாணி அணையில் 50 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்க கேரள அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து கேரள பேருந்துகளை முற்றுகையிட முயன்ற 50க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
