வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு

கோவை : வெளிநாடு முதலீடுகளை ஈர்த்து வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவை விமான நிலையத்தில் செண்டை மேளம் முழங்க,மலர் தூவி அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

கோவை : வெளிநாடு முதலீடுகளை ஈர்த்து வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவை விமான நிலையத்தில் செண்டை மேளம் முழங்க,மலர் தூவி அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உட்பட பல்வேறு வெளிநாடுகளில் 14 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்ட பின் இன்று காலை சென்னை திரும்பினார். பின்னர், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை கோவை வந்த அவருக்கு விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள் மற்றும் விவசாய அமைப்பு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். செண்டை மேளம் முழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மலர் மாலை அணிவித்தும், தென்னை பூக்களை கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி கார் மூலம் சேலம் சென்றார். விமான நிலைய சாலையின் இருபுறமும் கூட்டமாக கூடி நின்ற அதிமுகவினர் முதலமைச்சருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...