கோவை : கோவை அடுத்த க.க.சாவடி அருகே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் சீட் பெல்ட் அணிய வில்லை என போலீசார் அபராதம் விதித்த ரசீது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை : கோவை அடுத்த க.க.சாவடி அருகே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் சீட் பெல்ட் அணிய வில்லை என போலீசார் அபராதம் விதித்த ரசீது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை காளப்பட்டி அருகேயுள்ள கடைவீதியை சேர்ந்தவர் கார்த்திக்.இவர் இருசக்கர வாகனத்தில், கடந்த 7-ம் தேதி வேலந்தாவளம் சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், வேலந்தாவளம் அருகே க.க.சாவடி போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த கார்த்திக்கை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதில் தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞர் கார்த்திக்கு போலீசார் அபராதம் விதித்தனர். ஆனால், கார்த்திக்கிற்கு காவல்துறையினர் சார்பில் வழங்கப்பட்ட ரசீதில் தலைக்கவசம் அணியவில்லை என்பதற்கு பதிலாக, சீட் பெல்ட் அணியாமல் வந்தார் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞருக்கு போலீசார் சீட் பெல்ட் அணிய வில்லை என தங்களது ரசீதில் குறிப்பிட்டிருந்தது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவை காளப்பட்டி அருகேயுள்ள கடைவீதியை சேர்ந்தவர் கார்த்திக்.இவர் இருசக்கர வாகனத்தில், கடந்த 7-ம் தேதி வேலந்தாவளம் சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், வேலந்தாவளம் அருகே க.க.சாவடி போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த கார்த்திக்கை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதில் தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞர் கார்த்திக்கு போலீசார் அபராதம் விதித்தனர். ஆனால், கார்த்திக்கிற்கு காவல்துறையினர் சார்பில் வழங்கப்பட்ட ரசீதில் தலைக்கவசம் அணியவில்லை என்பதற்கு பதிலாக, சீட் பெல்ட் அணியாமல் வந்தார் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞருக்கு போலீசார் சீட் பெல்ட் அணிய வில்லை என தங்களது ரசீதில் குறிப்பிட்டிருந்தது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.