நீலகிரி : கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
நீலகிரி : கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் விளையும் மலை காய்கறிகள், ஓணம் பண்டிகையின் போது ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த முறையும் அதேபோல் கேரட், கிழங்கு, முள்ளங்கி, முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய் என பல்வேறு காய்கறிகள் தற்போது உதகையில் உள்ள நகராட்சி தினசரி சந்தையில் உள்ள காய்கறி மொத்த விற்பனையாளர்கள் ஏற்றுமதி செய்து செய்யப்பட்டு வருகிிறது.
கடந்த வாரம் கேரட் கிலோ ரூபாய் 30 முதல் 35 வரை விற்பனையாகி வந்த நிலையில் இன்று ரூபாய் 40 முதல் 45 வரை விலை கூடியுள்ளது. சில்லரை விற்பனையில் கிலோ 55 ரூபாய் வரையில் விற்பனையாகி வருகிறது. அதேபோல் உருளைக்கிழங்கும் ரூபாய் 40 முதல் 50 வரை விலை கூடியுள்ளது.
இது குறித்து, மொத்த காய்கறி விற்பனையாளர்கள் கூறும் போது:
கடந்த மாதம்பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டது. நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் நகரில் பல்வேறு கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள மலை காய்கறிகளின் விற்பனை தற்போது சூடு பிடித்துள்ளது.

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் விளையும் மலை காய்கறிகள், ஓணம் பண்டிகையின் போது ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த முறையும் அதேபோல் கேரட், கிழங்கு, முள்ளங்கி, முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய் என பல்வேறு காய்கறிகள் தற்போது உதகையில் உள்ள நகராட்சி தினசரி சந்தையில் உள்ள காய்கறி மொத்த விற்பனையாளர்கள் ஏற்றுமதி செய்து செய்யப்பட்டு வருகிிறது.
கடந்த வாரம் கேரட் கிலோ ரூபாய் 30 முதல் 35 வரை விற்பனையாகி வந்த நிலையில் இன்று ரூபாய் 40 முதல் 45 வரை விலை கூடியுள்ளது. சில்லரை விற்பனையில் கிலோ 55 ரூபாய் வரையில் விற்பனையாகி வருகிறது. அதேபோல் உருளைக்கிழங்கும் ரூபாய் 40 முதல் 50 வரை விலை கூடியுள்ளது.
இது குறித்து, மொத்த காய்கறி விற்பனையாளர்கள் கூறும் போது:
கடந்த மாதம்பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டது. நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் நகரில் பல்வேறு கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள மலை காய்கறிகளின் விற்பனை தற்போது சூடு பிடித்துள்ளது.