நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட குப்பைகளை பிரிக்கும் கிடங்கிலிருந்து ஏற்படும் கழிவுகளின் துர்நாற்றம் பல்வேறு நோய் உபாதைகளை ஏற்படுத்துவதாக கூறி 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட குப்பைகளை பிரிக்கும் கிடங்கிலிருந்து ஏற்படும் கழிவுகளின் துர்நாற்றம் பல்வேறு நோய் உபாதைகளை ஏற்படுத்துவதாக கூறி 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உதகை நகராட்சி மூலம் தினந்தோறும் சேகரமாகும் குப்பைகள், தீட்டுக்கள் பகுதியில் உள்ள குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்லப்படும். ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த குப்பை கிடங்கிற்கு குப்பைகள் எடுத்துச் செல்வது குறைக்கப்பட்டு நகராட்சி மூலம் திடக்கழிவு மேலாண்மை கிடங்குகளுக்கு குப்பைகளை எடுத்து சென்று தரம் பிரிக்கும் பணியும் இந்த குப்பை கிடங்கில் நடைபெற்று வந்தது.
காந்தல் பகுதியில் உள்ள 2 திடக்கழிவு மேலாண்மை குப்பை கிடங்கில் நாள்தோறும் நகராட்சி மூலம் சேகரமாகும் குப்பைகளை பிரிக்கும் பணியானது இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குப்பைகளை பிரித்து அதில் இருந்து எடுக்கும் உரமானது பல்வேறு விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நகராட்சி மூலம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இப்படி கிடங்கில் தரம் பிரிக்கப்படும் குப்பைகளால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் பல்வேறு நோய் உபாதைகளுக்கு ஆளாவதோடு நாள்தோறும் திடக்கழிவு மேலாண்மை குப்பைக்கிடங்கு வழியே செல்லும் பள்ளி குழந்தைகளுக்கும் பல்வேறு நோய் உபாதைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் நகராட்சி மீது குற்றம் சாட்டினார்.
ஆரம்ப காலத்தில் இங்கிருந்து குப்பைகள் மூலம் எந்த ஒரு நோயும் துர்நாற்றமும் இருக்காது என நகராட்சியில் கூறியிருந்த நிலையில், தற்பொழுது நாளுக்கு நாள் நகரில் சேகரமாகும் குப்பைகளை இங்கு கொண்டுவரபடுவதால் துர்நாற்றம் அதிகமாக வீசுவதாக கூறி இப்பகுதியில் சாலை மறியலில் இன்று ஈடுபட்டனர்.
இனி இது பாேன்று நடைப்பெறாமல் பார்த்துக் காெள்வதாக அதிகாரிகள் அளித்த உறுதிக்குப் பின் பாேராட்டம் கைவிடப்ட்டது.

உதகை நகராட்சி மூலம் தினந்தோறும் சேகரமாகும் குப்பைகள், தீட்டுக்கள் பகுதியில் உள்ள குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்லப்படும். ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த குப்பை கிடங்கிற்கு குப்பைகள் எடுத்துச் செல்வது குறைக்கப்பட்டு நகராட்சி மூலம் திடக்கழிவு மேலாண்மை கிடங்குகளுக்கு குப்பைகளை எடுத்து சென்று தரம் பிரிக்கும் பணியும் இந்த குப்பை கிடங்கில் நடைபெற்று வந்தது.
காந்தல் பகுதியில் உள்ள 2 திடக்கழிவு மேலாண்மை குப்பை கிடங்கில் நாள்தோறும் நகராட்சி மூலம் சேகரமாகும் குப்பைகளை பிரிக்கும் பணியானது இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குப்பைகளை பிரித்து அதில் இருந்து எடுக்கும் உரமானது பல்வேறு விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நகராட்சி மூலம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இப்படி கிடங்கில் தரம் பிரிக்கப்படும் குப்பைகளால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் பல்வேறு நோய் உபாதைகளுக்கு ஆளாவதோடு நாள்தோறும் திடக்கழிவு மேலாண்மை குப்பைக்கிடங்கு வழியே செல்லும் பள்ளி குழந்தைகளுக்கும் பல்வேறு நோய் உபாதைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் நகராட்சி மீது குற்றம் சாட்டினார்.
ஆரம்ப காலத்தில் இங்கிருந்து குப்பைகள் மூலம் எந்த ஒரு நோயும் துர்நாற்றமும் இருக்காது என நகராட்சியில் கூறியிருந்த நிலையில், தற்பொழுது நாளுக்கு நாள் நகரில் சேகரமாகும் குப்பைகளை இங்கு கொண்டுவரபடுவதால் துர்நாற்றம் அதிகமாக வீசுவதாக கூறி இப்பகுதியில் சாலை மறியலில் இன்று ஈடுபட்டனர்.
இனி இது பாேன்று நடைப்பெறாமல் பார்த்துக் காெள்வதாக அதிகாரிகள் அளித்த உறுதிக்குப் பின் பாேராட்டம் கைவிடப்ட்டது.