திருப்பூரில் மது வாங்க பணமில்லாத விரக்தியில் தற்கொலை மிரட்டல் விடுத்த குடிமகன்

திருப்பூர் : திருப்பூரில் மது வாங்க பணமில்லாததால் மது பாட்டில்களால் தன்னை தாக்கி கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர் : திருப்பூரில் மது வாங்க பணமில்லாததால் மது பாட்டில்களால் தன்னை தாக்கி கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி(40) என்பவர் இன்று காலை மது வாங்க சென்றுள்ளார். அவரிடம் போதிய பணம் இல்லாததால் டாஸ்மாக் கடையில் மது பாட்டில் தர மறுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி அங்கிருந்த காலி பாட்டில்களை எடுத்து உடைத்து தன்னை தாக்கி கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உடனடியாக டாஸ்மாக் கடையினர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். குடியினால் தன் குடும்பம் சொத்து அனைத்தையும் இழந்த எனக்கு தற்போது ஒரு பாட்டில் கூட தர மறுக்கின்றனர் என கூறி ரத்தம் வருமளவு தாக்கிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து, போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டும் அவர் மருத்துவமனை வர மறுத்துவிட்டார். இந்த சூழ்நிலையை புரிந்து கொண்ட பல்லடம் உதவி காவல் ஆய்வாளர் விஜயகுமார் மூர்த்தியை முதலுதவி சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...