திருப்பூரில் அரசின் இலவச மடிக்கணினி வழங்க கோரி மாணவர்கள் போராட்டம்

திருப்பூர் : திருப்பூரில் தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்க கோரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை பள்ளியை முற்றுகையிட்டு முன்னாள் பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்


திருப்பூர் : திருப்பூரில் தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்க கோரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை பள்ளியை முற்றுகையிட்டு முன்னாள் பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்



திருப்பூர் மாநகராட்சி பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த வாரம் பள்ளிக்கு மடிக்கணினிகள் வந்து விட்டதாகவும் தற்போது 11 மற்றும் 12 ம் வகுப்பில் படித்து வரும் மாணவிகளில் ஒரு சிலருக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மீதமுள்ள மாணவிகள் மடிக்கணினி கேட்டபோது, முன்னாள் மாணவிகளுக்கு வழங்கியது போக மீதமுள்ள மடிக்கணினிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் முன்னாள் மாணவிகள் சிலருக்கு மடிக்கணினி வழங்காத நிலையில், கணினி பெறாத முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது கல்வி பயின்றுவரும் மாணவிகளின் பெற்றோர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பள்ளியின் தலைமையாசிரியர் அடுத்த வாரத்திற்குள் அனைத்து மாணவிகளுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...