கோவை : மேட்டுப்பாளையம் அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுபாட்டினை இழந்து சாலையோர கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
கோவை : மேட்டுப்பாளையம் அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுபாட்டினை இழந்து சாலையோர கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் விக்கி. கல்லூரி மாணவரான இவர், கோவை சரவணம்பட்டி பகுதியில் அறை எடுத்து சக மாணவர்களுடன் தங்கி கோவை தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரது சகோதரர் திருமணம் நடைபெற உள்ள நிலையில், தனது சக கல்லூரி நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து, கோவையில் இருந்து அன்னூர் சாலை வழியே மேட்டுப்பாளையம் நோக்கி யுனோவா காரை இயக்கி வந்துள்ளார் விக்கி.

அப்போது, மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் தென்திருப்பதி நால்ரோடு அருகே அதிவேகமாக கார் வந்த போது கட்டுப்பாட்டினை இழந்து, அந்த பகுதியில் சாலையோரம் வெங்காயம், இளநீர் கடைக்குள் புகுந்தது விபத்து நேரிட்டது. இதில் காரில் வந்த அருண், ஈசாக், கிஷோர்,நடராஜ் மற்றும் விக்கி ஆகிய 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும், விபத்து ஏற்படுவதற்கு முன்பு கார் அதிவேகமாக சாலை ஓரத்தில் வந்த நிலையில் அதை பார்த்து சாலை ஓரத்தில் நின்ற கடைக்காரர்கள் தப்பி ஓடி தப்பியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விபத்தில் கடைகள் மீது கார் மோதியதில் ஒரு இருசக்கர வாகனம் மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பொருட்கள் சேதமானது. பின்னர் படுகாயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். கால் மற்றும் தலை பகுதிகளில் காயம் ஏற்பட்டதால் ஜந்தில் மூன்று பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். விபத்து குறித்து காரமடை போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் விக்கி. கல்லூரி மாணவரான இவர், கோவை சரவணம்பட்டி பகுதியில் அறை எடுத்து சக மாணவர்களுடன் தங்கி கோவை தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரது சகோதரர் திருமணம் நடைபெற உள்ள நிலையில், தனது சக கல்லூரி நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து, கோவையில் இருந்து அன்னூர் சாலை வழியே மேட்டுப்பாளையம் நோக்கி யுனோவா காரை இயக்கி வந்துள்ளார் விக்கி.

அப்போது, மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் தென்திருப்பதி நால்ரோடு அருகே அதிவேகமாக கார் வந்த போது கட்டுப்பாட்டினை இழந்து, அந்த பகுதியில் சாலையோரம் வெங்காயம், இளநீர் கடைக்குள் புகுந்தது விபத்து நேரிட்டது. இதில் காரில் வந்த அருண், ஈசாக், கிஷோர்,நடராஜ் மற்றும் விக்கி ஆகிய 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும், விபத்து ஏற்படுவதற்கு முன்பு கார் அதிவேகமாக சாலை ஓரத்தில் வந்த நிலையில் அதை பார்த்து சாலை ஓரத்தில் நின்ற கடைக்காரர்கள் தப்பி ஓடி தப்பியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விபத்தில் கடைகள் மீது கார் மோதியதில் ஒரு இருசக்கர வாகனம் மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பொருட்கள் சேதமானது. பின்னர் படுகாயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். கால் மற்றும் தலை பகுதிகளில் காயம் ஏற்பட்டதால் ஜந்தில் மூன்று பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். விபத்து குறித்து காரமடை போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.