திருப்பூரில் பணம் கேட்டு பெற்ற தாயையே மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருப்பூர் : திருப்பூர் காசிபாளையம் - மணியக்காரம்பாளையம் சாலையை சேர்ந்தவர் பின்னலாடை நிறுவன உரிமையாளர், சேகர்.

திருப்பூர் : திருப்பூர் காசிபாளையம் - மணியக்காரம்பாளையம் சாலையை சேர்ந்தவர் பின்னலாடை நிறுவன உரிமையாளர், சேகர். 

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சேகர் இறந்து விட, அவர் மனைவி ஆரோக்யமேரி பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தை எடுத்து நடத்தி வந்தார். வீட்டு கட்டிடத்தில் தரைத்தளத்தில் பின்னலாடை உற்பத்தி நிறுவனம் செயல்பட, மேல்தளத்தில் வசித்து வந்தனர். அவர், ஒரு மகள் திருமணமாகி வெளியூரில் வசிக்க, மற்றொரு மகள் கோவையில் தங்கி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதனால், ஆரோக்யமேரி மற்றும் மகன், ஹர்சித் மட்டும் வீட்டில் வசித்து வந்தனர். 

இந்நிலையில், இன்று பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் பணியாளர்கள் அனைவரும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மேல்தளத்திலிருந்து ஆரோக்யமேரியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பணியாளர்கள் அனைவரும் ஓடிச் சென்று பார்த்த போது, வயிறு மற்றும் நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஆரோக்யமேரி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 

அவர் மகன், ஹர்சித் வீட்டின் ஒரு பகுதியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். தொடர்ந்து ஊரக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆரோக்யமேரியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பணியாளர்கள் முயன்றுள்ளனர். அதற்குள், அவர் உயிரிழந்தார். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஊரக போலீஸார் ஹர்சித்தை கைது செய்தனர். 



ஆரோக்யமேரியின் உடல் மீட்கப்பட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மனநிலை பாதிக்கப்பட்டிருந்த ஹர்சித் வேலைக்கு செல்லாமல் பணம் கேட்டு வாக்குவாதத்தில் தாயை கொன்றதாக போலிசார் தெரிவித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...