கோவை : சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்த பேராசிரியர் ஒருவர் மாணவர்களிடம் ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி 70 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் அவரை கைது செய்து பணத்தைப் பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்டவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை : சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்த பேராசிரியர் ஒருவர் மாணவர்களிடம் ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி 70 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் அவரை கைது செய்து பணத்தைப் பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்டவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன். இவர் சென்னை அமிர்தா கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துள்ளார்.

இவர் கல்லூரியில் படிக்கும் போது, அதே கல்லூரியில் பேராசிரியராக இருந்த ரமேஷ்பாபு என்பவர், ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் பணம் பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து அங்கு படித்த 30 மாணவர்களிடம் இருந்து 2 மற்றும் 3 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளதாக தெரிகிறது.
ஆனால், மாணவர்கள் படிப்பை முடித்த பிறகும் கூட ரமேஷ்பாபு வேலை வாங்கி தரவில்லை என குற்றம் சாடுகின்றனர் பாதிக்கபட்ட மாணவர்கள்.
பணம் கொடுத்த மாணவர்கள் தொடர்ந்து ரமேஷ்பாபுவிற்கு நெருக்கடி கொடுத்துள்ளனர், ஆனால் ரமேஷ்பாபு போலியான வேலையில் சேரும் கடிதம் கொடுத்து மாணவர்களை ஏமாற்றியுள்ளார். இதையடுத்து, அவர் தலைமறைவாகிவிட்டார்.

இதைத் தொடர்ந்து ரமேஷ் பாபுவை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் ரமேஷ்பாபுவை கைது செய்து பணத்தைப் பெற்றுத் தருமாறு மாணவர்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன். இவர் சென்னை அமிர்தா கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துள்ளார்.

இவர் கல்லூரியில் படிக்கும் போது, அதே கல்லூரியில் பேராசிரியராக இருந்த ரமேஷ்பாபு என்பவர், ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் பணம் பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து அங்கு படித்த 30 மாணவர்களிடம் இருந்து 2 மற்றும் 3 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளதாக தெரிகிறது.
ஆனால், மாணவர்கள் படிப்பை முடித்த பிறகும் கூட ரமேஷ்பாபு வேலை வாங்கி தரவில்லை என குற்றம் சாடுகின்றனர் பாதிக்கபட்ட மாணவர்கள்.
பணம் கொடுத்த மாணவர்கள் தொடர்ந்து ரமேஷ்பாபுவிற்கு நெருக்கடி கொடுத்துள்ளனர், ஆனால் ரமேஷ்பாபு போலியான வேலையில் சேரும் கடிதம் கொடுத்து மாணவர்களை ஏமாற்றியுள்ளார். இதையடுத்து, அவர் தலைமறைவாகிவிட்டார்.

இதைத் தொடர்ந்து ரமேஷ் பாபுவை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் ரமேஷ்பாபுவை கைது செய்து பணத்தைப் பெற்றுத் தருமாறு மாணவர்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.