மற்றவர்களை குறை கூறுவதற்கு பதிலாக மாற்றத்திற்காக காத்திருங்கள் : சி கே ரங்கநாதன், கவின்கேர் நிறுவனர் தலைவர்

கோவை : "தொழில்துறை பங்குதாரர்கள் மற்றவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக மாறிவரும் சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப மாற வேண்டும் அல்லது தொழில்துறைக்கு சாதகமான கொள்கைகளை அரசாங்கம் கொண்டு வரும் வரை காத்திருக்க வேண்டும்" என்று கவின்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் தலைவர் சி.கே.ரங்கநாதன் தெரிவித்தார்.

கோவை : "தொழில்துறை பங்குதாரர்கள் மற்றவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக மாறிவரும் சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப மாற வேண்டும் அல்லது தொழில்துறைக்கு சாதகமான கொள்கைகளை அரசாங்கம் கொண்டு வரும் வரை காத்திருக்க வேண்டும்" என்று கவின்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் தலைவர் சி.கே.ரங்கநாதன் தெரிவித்தார்.



தி ரெசிடென்சி டவர்ஸில் நடந்த சைமா டெக்ஸ்பின் 2019, 13வது தலைமை நிர்வாக அதிகாரி மாநாட்டில் உரையாற்றிய ரங்கநாதன், தற்போதைய பொருளாதார வீழ்ச்சியை நிர்வகிப்பதற்கும் எதிர்காலத்தில் நிர்வகிப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும், இன்று நடைபெற்ற தலைமை நிர்வாக அதிகாரி மாநாட்டில் "எதிர்காலத்தை எதிர்கொள்வது" என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு, வெவ்வேறு தலைப்புகளில் பல்வேறு தொழிலதிபர்கள் பேசினர்.

இந்த நிகழ்வில் பேசிய ரங்கநாதன், டிஜிட்டல் மாற்றத்தால், வரும் ஆண்டுகளில் வணிகம் செய்யும் முறையில் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும் என்றார்.



பின்னர், கட்டமைப்பு குறித்து பேசிய ரங்கநாதன், “வணிகங்களில் சிறந்த கட்டமைப்பு இல்லை எனவும் வணிகங்கள் நெகிழ்வானதாக இருக்க வேண்டும், சரியான நபர்களை வைக்க தயங்கக்கூடாது என தனக்குத்தானே முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், நம்மில் பெரும்பாலானவர்கள் 97 சதவிகித நேரத்தை பழக்கமான காரியங்களைச் செய்கிறோம், இது மற்ற விஷயங்களை சிந்திக்க விடாது" என்று கூறினார்.

சைமா தலைவர் பி.நடராஜ் வரவேற்புரை நிகழ்த்திய இந்த நிகழ்ச்சியில் சைமா உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஜவுளித் தொழில்களைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...