கேரளாவில் பெய்த கனமழையால் குன்னூருக்கு இடம்பெயர்ந்த வௌவால்கள்

நீலகிரி : கேரளாவில் தொடர் மழைபெய்த காரணத்தால், வனங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதால், நீலகிரிக்கு வௌவால்கள் அதிகளவில் இடம்பெயர்ந்து வந்துள்ளன.

நீலகிரி : கேரளாவில் தொடர் மழைபெய்த காரணத்தால், வனங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதால், நீலகிரிக்கு வௌவால்கள் அதிகளவில் இடம்பெயர்ந்து வந்துள்ளன.



கேரள மாநிலத்தில், கொட்டி தீர்த்த மழையால் கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்பட்டன. மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை போன்று, வன உயிரினங்களும் பாதிக்கப்பட்டதுடன், உணவை தேடி இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் பகுதியில் ராணுவ முகாம் பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பு சில வௌவால்கள் மட்டுமே வந்து மரங்களில் தங்கியிருந்தன. நாளுக்கு நாள் இப்பகுதியில் வவ்வால்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இரண்டாவது முறையாக நூற்றுக்கணக்கான பெரிய வௌவால்கள் வருகைதந்துள்ளது. கடந்த ஆண்டும் கேரளாவில் மழை பெய்த போது வௌவால்கள் இதே இடத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 



வௌவால்கள் மூலம் வைரஸ் காய்ச்சல் பரவி விடாமல் சுகாதார அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் பேசும் பாேது, நோய்கள் குறித்த இதுவரை எந்த வித அறிகுறியும் தென்படவில்லை என்றும் உயரதிகாரிகள் டெல்லி சென்றுள்ளதால் அவர்கள் வந்ததும் இது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...