உதகையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் அரசு மதுபான கடையை அகற்ற கோரி ஆட்சியரிடம் மனு

நீலகிரி : உதகையில் பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு இடையூறாக இருக்கும் அரசு மதுபான கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி : உதகையில் பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு இடையூறாக இருக்கும் அரசு மதுபான கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த பாரஸ்கேட் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உதகை வந்தால் வழிபடும் ஆஞ்சநேயர் கோயில், தனியாரின் பாரதியார் பல்கலைக்கழகம், அரசு பள்ளி போன்றவை இருந்து வருகிறது. மேலும் கூட்டுறவு பால் சொசைட்டி, கூட்டுறவு நியாய விலை கடைகளும் உள்ளன.

இந்நிலையில், அப்பகுதி பேருந்து நிலையம் அருகே அரசு அனுமதி பெறாத கட்டிடத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இங்கு வரும் குடிமகன்கள் சிறுநீர் கழிப்பதும், பொது வழியிலேயே மது அருந்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்படு வருவதோடு பள்ளி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், பெண்கள், முதியவர்கள் என அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் உடனடியாக மதுபான கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...