தகவல் தொடர்பை இழந்து கட்டுப்பாட்டை மீறி நிலவில் விழுந்த விக்ரம் லேண்டர் உடையாமல் லேசாக சாய்ந்த நிலையில் இருப்பதாகவும் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி செய்யப்பட்டு வருவதாக இஸ்ரோ தகவல் அளித்துள்ளது.
தகவல் தொடர்பை இழந்து கட்டுப்பாட்டை மீறி நிலவில் விழுந்த விக்ரம் லேண்டர் உடையாமல் லேசாக சாய்ந்த நிலையில் இருப்பதாகவும் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி செய்யப்பட்டு வருவதாக இஸ்ரோ தகவல் அளித்துள்ளது.
சந்திரயான் 2 மிஷனின் லேண்டர் விக்ரம் சனிக்கிழமை அதிகாலையில் சந்திர மேற்பரப்பில் இருந்து 2.1 கி.மீ தூரத்தில் இருக்கும் போது, தகவல் தொடர்பை இழந்தது. இருப்பினும், இன்னும் 14 நாட்களுக்குள் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிப்போம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார். லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்த போதிலும் ஆர்ப்பிட்டர் கருவி நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் லேண்டர் எங்கே இருக்கிறது என்பது குறித்து ஆர்ப்பிட்டர் கருவி புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. லேண்டர் உடையாமல் லேசாக சாய்ந்த நிலையில் இருப்பதாகவும் இதனால் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைந்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.
சந்திரயான் 2 மிஷனின் லேண்டர் விக்ரம் சனிக்கிழமை அதிகாலையில் சந்திர மேற்பரப்பில் இருந்து 2.1 கி.மீ தூரத்தில் இருக்கும் போது, தகவல் தொடர்பை இழந்தது. இருப்பினும், இன்னும் 14 நாட்களுக்குள் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிப்போம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார். லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்த போதிலும் ஆர்ப்பிட்டர் கருவி நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் லேண்டர் எங்கே இருக்கிறது என்பது குறித்து ஆர்ப்பிட்டர் கருவி புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. லேண்டர் உடையாமல் லேசாக சாய்ந்த நிலையில் இருப்பதாகவும் இதனால் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைந்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.