கோவை : விவசாயி அல்லாதோர் உழவர் சந்தையில் விற்பனை செய்ய கூடாது எனவும் அங்குள்ள குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : விவசாயி அல்லாதோர் உழவர் சந்தையில் விற்பனை செய்ய கூடாது எனவும் அங்குள்ள குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பழனிசாமி ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், விவசாயி அல்லாதோர் உழவர் சந்தையில் விற்பனை செய்ய கூடாது என்றும் அங்குள்ள குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
இது குறித்து அவர்கள் பேசுகையில், மேட்டுப்பாளையம் உழவர் சந்தை கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டதாகவும் விவசாயிகள் நலனிற்கு துவங்கப்பட்ட இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தெரிவித்தனர். மேட்டுப்பாளையம் பகுதியில் 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் விளை பொருட்களை பயிரிட்டு உழவர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் விவசாயிகள் அல்லாதோர் உழவர் சந்தையை ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாகவும் இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றனர்.
மேலும், அங்கு விலைக்கு வாங்கி விவசாயிகள் என்ற போர்வையில் விற்பனை செய்பவர்கள் அரசியல் கட்சியினருடன் சேர்ந்து உண்மையான விவசாயிகளை மிரட்டுவதாக தெரிவித்தனர். இந்த பிரச்சனைகளை தீர்வு காண கடந்த ஒரு வருடமாக மனு அளித்து வருவதாகவும் நடவடிக்கை இல்லாத காரணத்தால் 4ம் தேதி உண்ணாவிரதம் மேற்கொண்டதாக கூறியவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒரே குடும்பத்தில் இருவருக்கான அடையாள அட்டையை ரத்து செய்ய வேண்டும், பயிர் முன்பதிவு பதிவேடு வைத்து பராமரிக்க வேண்டும், உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை தருபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், விவசாயிகள் கூட்டத்திற்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்,சந்தையில் பயிர் செய்துள்ள விவசாயிகள் மட்டுமே உள்ள நிலை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நடைமுறை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
கோவை மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பழனிசாமி ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், விவசாயி அல்லாதோர் உழவர் சந்தையில் விற்பனை செய்ய கூடாது என்றும் அங்குள்ள குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
இது குறித்து அவர்கள் பேசுகையில், மேட்டுப்பாளையம் உழவர் சந்தை கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டதாகவும் விவசாயிகள் நலனிற்கு துவங்கப்பட்ட இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தெரிவித்தனர். மேட்டுப்பாளையம் பகுதியில் 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் விளை பொருட்களை பயிரிட்டு உழவர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் விவசாயிகள் அல்லாதோர் உழவர் சந்தையை ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாகவும் இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றனர்.
மேலும், அங்கு விலைக்கு வாங்கி விவசாயிகள் என்ற போர்வையில் விற்பனை செய்பவர்கள் அரசியல் கட்சியினருடன் சேர்ந்து உண்மையான விவசாயிகளை மிரட்டுவதாக தெரிவித்தனர். இந்த பிரச்சனைகளை தீர்வு காண கடந்த ஒரு வருடமாக மனு அளித்து வருவதாகவும் நடவடிக்கை இல்லாத காரணத்தால் 4ம் தேதி உண்ணாவிரதம் மேற்கொண்டதாக கூறியவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒரே குடும்பத்தில் இருவருக்கான அடையாள அட்டையை ரத்து செய்ய வேண்டும், பயிர் முன்பதிவு பதிவேடு வைத்து பராமரிக்க வேண்டும், உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை தருபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், விவசாயிகள் கூட்டத்திற்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்,சந்தையில் பயிர் செய்துள்ள விவசாயிகள் மட்டுமே உள்ள நிலை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நடைமுறை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.