கோவை : கோவை ராமநாதபுரம் அருகே உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்த கல்லூரி மாணவி நேற்று மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை : கோவை ராமநாதபுரம் அருகே உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்த கல்லூரி மாணவி நேற்று மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தையடுத்து தாளவாடி சிமிட்டஹள்ளி பகுதியை சேர்ந்த அந்தோணியின் மகள் பவித்ரா (21). இவர் கோவை சுங்கம் அருகே உள்ள தனியார் அறிவியல் கல்லூரியில் எம்எஸ்சி இறுதி ஆண்டு பயின்று வருகிறார். இவர் ராமநாதபுரம் பாரதி நகர் மூன்றாவது தெருவில் தனது சக கல்லூரி மாணவிகளுடன் ஒரு குடியிருப்பில் தங்கி வருகிறார். இந்த நிலையில், பவித்ராவுடன் தங்கியிருந்த சக மாணவிகள் சனி ஞாயிறு விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்
ஆனால் பவித்ரா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் அவர்களின் வீடு உள்பக்கமாக பூட்டியே கிடப்பதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் நேற்று வீட்டின் கதவைத் தட்டி உள்ளனர்.
ஆனால் கதவு திறக்கவில்லை.
இதையடுத்து வீட்டிலுள்ள ஜன்னலை திறந்து பார்த்தபோது கல்லூரி மாணவி பவித்ரா துப்பட்டாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து தகவலறிந்து வந்த ராமநாதபுரம் போலீசார் மாணவியின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர், பவித்ரா உடன் இருந்த மாணவிகள், சக கல்லூரி மாணவிகள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கல்லூரி மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.