கோவையில் வணிக நிறுவனத்தின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கும் மர்மநபர்கள் : சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை

கோவை : அவினாசி சாலை மேம்பாலம் அருகே உள்ள சோமசுந்தர சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : அவினாசி சாலை மேம்பாலம் அருகே உள்ள சோமசுந்தர சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை அவிநாசி சாலையில் உள்ள மேம்பாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான எலக்ட்ரிக்கல் பம்செட் போன்ற பல்வேறு வகையான வணிக நிறுவனங்கள் உள்ளது. பல கோடி ரூபாய்களுக்கு வியாபாரம் நடைபெறும் இந்த பகுதியை குறிவைத்து கொள்ளையர்கள் கடந்த சில மாதங்களாக கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக பல புகார்கள் வெளியாகியும் போதுமான நடவடிக்கைகள் இல்லை.



இந்நிலையில், இன்று அதிகாலை மூன்று பேர் கொண்ட கும்பல் சோமசுந்தரம் சாலையில் உள்ள ஒரு கடையின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு மாநகர குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...