தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட சந்திரயான் - 2 விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் லேண்டருடன் தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட சந்திரயான் - 2 விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் லேண்டருடன் தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் - 2 விண்கலம், கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. இதையடுத்து படிப்படியாக விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டது.
இதனை நேற்று அதிகாலை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. மிகவும் சவால் நிறைந்த பணியில், நிலவில் இருந்து 2.1 கி.மீ தொலைவில் இருக்கும் போது, லேண்டரில் இருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இருப்பினும் காணாமல் போன விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த அடுத்த 14 நாட்கள் தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். அது நிலவின் மேற்பரப்பில் இருப்பதாகவும் இதனை ஆர்பிட்டர் கருவி புகைப்படம் எடுத்துள்ளதாக கூறிய அவர், லேண்டருடன் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம் எனக் கூறியுள்ளார்.