தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை சௌந்திரராஜன்

ஹைதராபாத் : தெலுங்கானா ஆளுநராக ஹைதராபாத் ராஜ்பவனில் தமிழிசை சௌந்திரராஜன் இன்று பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் தெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமை தமிழிசை சௌந்திரராஜனுக்கு கிடைத்துள்ளது.

ஹைதராபாத் : தெலுங்கானா ஆளுநராக ஹைதராபாத் ராஜ்பவனில் தமிழிசை சௌந்திரராஜன் இன்று பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் தெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமை தமிழிசை சௌந்திரராஜனுக்கு  கிடைத்துள்ளது.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை அறிவித்தார். அதில், தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டார்.



அதன் படி, இன்று ஹைதராபாத் ராஜ்பவனில் தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்திரராஜன் பதவியேற்றார். அவருக்கு, தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரகுவேந்திர சிங் சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநராக பதவியேற்ற தமிழிசைக்கு, முதல்வர் சந்திரசேகர ராவ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.



இந்த பதவியேற்பு விழாவில், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர். மேலும் தமிழக அமைச்சர்கள், வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சரத்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆளுநராக பதவியேற்ற பின்னர், தமிழிசை, தனது தந்தை குமரி ஆனந்தனிடம் ஆசி வாங்கினார். 



முன்னதாக ஆளுநராக பதவியேற்க, ஐதராபாத் வந்த தமிழிசையை முதல்வர் சந்திரசேகர ராவ் வரவேற்றார். பின்னர், நடந்த போலீசார் அணிவகுப்பு மரியாதையையும் தமிழிசை ஏற்றுக் கொண்டார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...