நீலகிரியில் 200 அடி ஆழ கார் விபத்திலிருந்து 4 பேரை காப்பாற்றிய மரம் : சாலையோரங்களில் தடுப்பு சுவர்கள் அமைக்க கோரிக்கை

நீலகிரி : கோத்தகிரியில் இருந்து உதகை செல்லும் சாலை பகுதியில் மேட்டுப்பாளையத்திலிருந்து வந்து கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று, பேரார் பகுதியில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடும் பாேது சாலையின் ஓரத்தில் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் 200 அடி பள்ளத்தில் விழுந்திருக்க வேண்டிய சூழலில், மரத்தில் மாேதி நின்றதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.


நீலகிரி : கோத்தகிரியில் இருந்து உதகை செல்லும் சாலை பகுதியில் மேட்டுப்பாளையத்திலிருந்து வந்து கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று, பேரார் பகுதியில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடும் பாேது சாலையின் ஓரத்தில் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் 200 அடி பள்ளத்தில் விழுந்திருக்க வேண்டிய சூழலில், மரத்தில் மாேதி நின்றதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து உதகை செல்லும் சாலையில் பல இடங்களில் தடுப்பு சுவர் இல்லாததால் மண் அரிப்பு ஏற்பட்டு அடிக்கடி விபத்துக்கள் நேரிடுவதால் நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.



கோத்தகிரியில் இருந்து உதகை செல்லும் சாலை பகுதியில் இன்று மேட்டுப்பாளையத்திலிருந்து வந்து கொண்டிருந்த சொகுசு வாகனம் பேரார் பகுதியில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடும் பாேது சாலையின் ஓரத்தில் நிலைதடுமாறி விபத்திற்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்த நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

விபத்துக்குள்ளான வாகனம் 200 அடி பள்ளத்தில் விழுந்திருக்க வேண்டிய சூழலில் மரத்தில் மாேதி நின்றது. இதன் காரணமாக மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நேரிடுவதால் உதகை முதல் கோத்தகிரி வரையிலான சாலையில் எங்கெங்கு தடுப்பு சுவர்கள் தேவைப்படுகிறதோ அப்பகுதிகளில் தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...