கோவை : சிறுவாணி அணையில் முழுமையாக தண்ணீரை தேக்காமல் வீணாக தண்ணீரை திறந்து விடும் கேரள அரசை கண்டித்து, வரும் 10 ம் தேதி கோவைக்கு வரும் கேரள பேருந்துகளை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தப்படும் என தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் அறிவித்துள்ளார்.
கோவை : சிறுவாணி அணையில் முழுமையாக தண்ணீரை தேக்காமல் வீணாக தண்ணீரை திறந்து விடும் கேரள அரசை கண்டித்து, வரும் 10 ம் தேதி கோவைக்கு வரும் கேரள பேருந்துகளை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தப்படும் என தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் அறிவித்துள்ளார்.
கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் முழு கொள்ளளவான 50 அடிக்கு தண்ணீரை கேரள அரசு தேக்கவிடுவதில்லை என்று குற்றம்சாட்டினார்.
மேலும், கேரள அரசு சிறுவாணி அணையில் 42 அடி உயரத்திற்கு வந்ததும் தண்ணீரை வீணாக திறந்து விடுவதாகவும், அணையில் தண்ணீரை முழு கொள்ளவை எட்ட விடாமல், தண்ணீரை கேரள அரசு வீணாக்குவதால் கோவையில் கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் எனவும், தமிழக மக்களை கேரள அரசு வஞ்சிக்கிறது எனவும் அவர் கூறினார்.
அதேபோல, கடந்தாண்டு 3 முறை சிறுவாணி அணை நிரப்பிய போதும், கேரளாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், சிறுவாணி அணை பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்த அவர், கேரள அரசை கண்டித்து பல்வேறு கட்சிகள் சார்பில் வருகின்ற 10ம் தேதி கோவைக்கு வரும் கேரள பேருந்துகளை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.