பாறு கழுகுகளை காக்க மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும் : பாறு கழுகுகள் பாதுகாப்பு அமைப்பு செயலாளர்

நீலகிரி : இறந்தவைகளை மட்டும் தின்று, இருக்கும் உயிர்களை காக்கும் பாறு கழுகுகளை காக்க மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும் என பாறு கழுகு பாதுகாப்பு குழு அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்

நீலகிரி : இறந்தவைகளை மட்டும் தின்று, இருக்கும் உயிர்களை காக்கும் பாறு கழுகுகளை காக்க மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும் என பாறு கழுகு பாதுகாப்பு குழு அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.



ஆயிரக்கணக்கில் வனங்களில் வாழ்ந்து வந்த பாறுகழுகுகளின் எண்ணிக்கை தற்போது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் வனங்களில் புலி சிறுத்தை ஆகிய வனவிலங்குகள் கால்நடைகளை கொன்று விடுவதும், கால்நடைகளுக்கு நோய்கள் ஏற்படும் போது நச்சுத்தன்மை உள்ள மருந்துகளை செலுத்துவதால், இந்த பாறு கழுகுகள் அதை உண்டு இறக்கும் நிலை ஏற்படுகிறது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மாயார், மசினகுடி பகுதியில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் மட்டும் உயிர் வாழ்கின்ற பாறு கழுகுகள் மீண்டும் உயிர் வாழ மத்திய மாநில அரசுகள் அதற்குண்டான பாதுகாப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என பாறு கழுகுகள் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் பாரதிதாசன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வனத்துறை சார்பாக பாறு கழுகுகள் பாதுகாக்கும் குழு இருந்து வரும் நிலையில், சரியான முறையில் தங்கள் பணியினை கடைப்பிடிப்பதன் மூலம் மீண்டும் பாறு கழுகுகளின் எண்ணிக்கை அதிகமாக கூடும் என்று கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...