நீலகிரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு நிவாரணம் வழங்கிய குமரகுரு கல்லூரி, கேசிடி கேர் அமைப்பு

நீலகிரி : கோவை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி கேசிடி கேர் அமைப்புடன் இணைந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பணியர் பழங்குடியின மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கினர்.

நீலகிரி : கோவை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி கேசிடி கேர் அமைப்புடன் இணைந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பணியர் பழங்குடியின மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கினர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த மாதம் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவால் வீடுகளை இழந்து ஏற்பட்டு பெரும் பாதிப்புக்குள்ளாக்கினர். மேலும் சில மக்கள் மழையால் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர்.



இந்த நிலையில், தற்பொழுது அவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கள ஆய்வின் மூலம் அறிந்து கொண்ட குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி மற்றும் கேசிடி கேர் அமைப்பு, கூடலூர் தொரப்பள்ளி மொளப்பள்ளி, நிலக்கோட்டை மேபில்டு, குந்தலாடிக் கடலக்கொல்லி போன்ற இடங்களில் வசிக்கும் 60 பணியர் பழங்குடியின குடும்பங்களுக்கு நேரடியாக அவர்களின் குடியிருப்பிற்குச் சென்று அவர்தம் உடைமைகள் நனையாமல் வைப்பதற்குரிய இரும்புப்பெட்டி, உடை, பால்பொடிமுதலான பொருட்களை அளித்தனர்.



கல்லூரியின் சமூகப் பணியியல் மற்றும் உளவியல் துறையைச் சார்ந்த மாணவர்கள் அந்த மக்களிடையே ஆலோசனை மேற்கொண்டதோடு விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் ஊட்டினர். இந்த நிகழ்வில் கேசிடி கேர் அமைப்பினைச் சார்ந்த திரு முரளி, ரஞ்சித், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் உதவிப்பேராசிரியர்கள் முனைவர் செ.துரைமுருகன், கோ.சுனில்ஜோகி, முதுகலை சமூகப் பணியியல் மாணவர்கள் ரூபஸ், திவாகர், கமலோஷ், முதலாமாண்டு உளவியல் துறை மாணவன் துருவன், கணிதத்துறை மாணவர் நிஷாந்த், அரசியல் அறிவியல் துறை மாணவன் வசந்த், குமரகுரு கல்லூரியின் மாணவர்கள் ஸ்ரீதர், ஹரிஷ் சுபாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...