கோவையில் விளையாட்டாக வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் : பெற்றோருடன் ஆஜராக போலீசார் உத்தரவு

கோவை : டாடாபாத் பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவனை பெற்றோருடன் காவல் நிலையத்தில் ஆஜராக போலீசார் உத்தரவிட்டனர்.

கோவை : டாடாபாத் பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவனை பெற்றோருடன் காவல் நிலையத்தில் ஆஜராக போலீசார் உத்தரவிட்டனர்.

கோவை காந்திபுரம் அருகே உள்ள டாடாபாத் பகுதியில் வணிக வளாகம் நடத்தி வருபவர் மோகன் தாஸ். இந்த நிலையில் வணிக வளாகத்திற்கு நேற்று இரவு தொலைப்பேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த மோகன்தாஸ் மாநகர காவல் துறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காட்டூர் போலீசார் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில் இந்த மிரட்டல் பொய் என்பதும் இதை ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் செய்துள்ளதும் தெரியவந்தது.

அதேபோல, சிறுவன் தனது பள்ளி நண்பர்களிடம் விளையாட்டாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்க எண்ணி டயல் செய்த போது தவறுதலாக கோவை வணிகவளாக உரிமையாளருக்கு அழைப்பு வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து காட்டூர் போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவனை அழைத்துக் கொண்டு கோவை காட்டூர் காவல்நிலையத்தில் ஆஜராகும் மாறு பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இவர்கள் நேரில் ஆஜரானவுடன் இது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தகவல்கள் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...