நீலகிரியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

நீலகிரி : நீலகிரியை அடுத்த கோத்தகிரி கூக்கல்தொரை பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


நீலகிரி : நீலகிரியை அடுத்த கோத்தகிரி கூக்கல்தொரை பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோத்தகிரி கூக்கல்தொரை பகுதியில் அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். டாஸ்மாக் கடைக்கு அருகே வங்கி, பள்ளி ,அரசு அலுவலகம், நியாய விலை கடை செயல்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக கூறி போராட்டம் நடத்தப்பட்டதால் டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது.



இதனைத்தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகம் தற்காலிகமாக கடையை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என உறுதி அளித்த நிலையில், இன்று திடீரென டாஸ்மாக் ஊழியர்கள் கடையை திறக்க காரில் மது பாட்டிலை கொண்டு வந்துள்ளனர். தகவலறிந்த ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க விடாமல் போராட்டம் நடத்தினர்.



இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கோத்தகிரி போலீசார், டாஸ்மாக் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, பொதுமக்களை சமாதானப்படுத்தினர். மேலும், டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்ற பொதுமக்கள், டாஸ்மாக் கடை மீண்டும் வந்தால் பள்ளி மாணவர்களுடன் போராட்டம் நடத்த உள்ளதாக கூறினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...