நீலகிரி : தமிழக அரசு சார்பில் 5 கோடி நிதி பெற்று குன்னுார் ஆற்று நீர் பயன்பாட்டிற்கு உகந்ததாக சுத்திகரிக்கப்படும் என குன்னூரில் நடைபெற்ற கிளீன் குன்னூர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
நீலகிரி : தமிழக அரசு சார்பில் 5 கோடி நிதி பெற்று குன்னுார் ஆற்று நீர் பயன்பாட்டிற்கு உகந்ததாக சுத்திகரிக்கப்படும் என குன்னூரில் நடைபெற்ற கிளீன் குன்னூர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரப் பகுதியில் ஓடும் ஆற்றில் கடந்த பல ஆண்டுகளாக இறைச்சிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு மிகப்பெரிய அளவிலான சுகாதார சீர்கேடு ஏற்றிருந்தது. இதனை கிளீன் குன்னூர் என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் தூய்மைப் படுத்தப்பட்டது. இந்த நீர் பவானி ஆற்றில் சென்று கலப்பதால் இதனை குடிநீராகவும் மற்ற பயன்பாட்டிற்காகவும் சமவெளி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனைக் கருத்தில் காெண்டு ஆற்றினை சுற்றிலும் 'கீளீன் குன்னூர்' அமைப்பு சார்பில் ஆற்றைத் தூய்மைப்படுத்தி, கழிவுகள் மற்றும் வண்டல் மண் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது.

மேலும், ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, மவுண்ட்ரோடு முதல் வி.பி.தெரு வரை 398 மீட்டர் நீளத்திற்கு 7 முதல் 9 அடி உயரம் வரையிலான செயின்லிங்க், வேலி அமைக்கும் பணி மும்பையை சேர்ந்த 'இஸ்ப்ராவா ஹோம்ஸ்' நிறுவனத்தின் சார்பில் 7 லட்சம் மதிப்பிலான செயின்லீக் வேலி அமைக்கப்பட்டது. அதன் நிறைவு விழா குன்னுார் நகராட்சி வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கீளீன் குன்னூர்' மற்றும் மும்பையை சேர்ந்த இஸ்ப்ராவா ஹோம்ஸ் நிறுவனத்தின் தலைவர் தர்சன்ஷா, கோத்ரெஜ் மேலாண்மை இயக்குநர் நாதிர் கோத்ரெஜ் குன்னுார் சட்ட மன்ற உறுப்பினர் சாந்தி ராமு, சுற்றுச்சுழல் ஆர்வலர்கள்' தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரப் பகுதியில் ஓடும் ஆற்றில் கடந்த பல ஆண்டுகளாக இறைச்சிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு மிகப்பெரிய அளவிலான சுகாதார சீர்கேடு ஏற்றிருந்தது. இதனை கிளீன் குன்னூர் என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் தூய்மைப் படுத்தப்பட்டது. இந்த நீர் பவானி ஆற்றில் சென்று கலப்பதால் இதனை குடிநீராகவும் மற்ற பயன்பாட்டிற்காகவும் சமவெளி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனைக் கருத்தில் காெண்டு ஆற்றினை சுற்றிலும் 'கீளீன் குன்னூர்' அமைப்பு சார்பில் ஆற்றைத் தூய்மைப்படுத்தி, கழிவுகள் மற்றும் வண்டல் மண் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது.

மேலும், ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, மவுண்ட்ரோடு முதல் வி.பி.தெரு வரை 398 மீட்டர் நீளத்திற்கு 7 முதல் 9 அடி உயரம் வரையிலான செயின்லிங்க், வேலி அமைக்கும் பணி மும்பையை சேர்ந்த 'இஸ்ப்ராவா ஹோம்ஸ்' நிறுவனத்தின் சார்பில் 7 லட்சம் மதிப்பிலான செயின்லீக் வேலி அமைக்கப்பட்டது. அதன் நிறைவு விழா குன்னுார் நகராட்சி வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கீளீன் குன்னூர்' மற்றும் மும்பையை சேர்ந்த இஸ்ப்ராவா ஹோம்ஸ் நிறுவனத்தின் தலைவர் தர்சன்ஷா, கோத்ரெஜ் மேலாண்மை இயக்குநர் நாதிர் கோத்ரெஜ் குன்னுார் சட்ட மன்ற உறுப்பினர் சாந்தி ராமு, சுற்றுச்சுழல் ஆர்வலர்கள்' தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.