பில்லூர் அணை மீண்டும் நிரம்பியுள்ளதால் பரளிக்காடு சூழல் சுற்றுலா ரத்து செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை தகவல்

கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா தளம் பில்லூர் அணை நிரம்பியதையடுத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.


கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா தளம் பில்லூர் அணை நிரம்பியதையடுத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.



கோவை காரமடை அருகே உள்ள பரளிக்காடு என்ற பகுதியில் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா தளம் அமைக்கப்பட்டுள்ளது. இது சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழல் சுற்றுலா தளத்தை வனத்துறையினருடன் இணைந்து மலைவாழ் மக்களும் செயல்பட்டு வருகின்றனர். இங்கு வர முன்பதிவு செய்வது அவசியம்.

இப்படி வனத்தின் நடுவே அணையின் நீர் தேக்கபகுதியில் பரிசல் பயணம் செய்து இயற்கை அழகினை கண்டு ரசிப்பதுடன் வனத்துறை பாதுகாப்புடன் டிரக்கிங்,மலைவாழ் மக்களின் உணவு, மூலிகை குளியல் என பல சிறப்பம்சங்கள் இந்த பரளிக்காடு பகுதியில் உள்ளது.

ஆகவே இந்த சுற்றுலா பகுதிக்கு தமிழகம் கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

ஆனால் பருவமழை காலங்களில் அணை நிரம்பும் பொழுது இந்த சுற்றுலா தளத்தை பயன்படுத்துவது ஆபத்தானது.

இது போன்ற பருவ மழை பெய்து அணை நிரம்பும் நேரங்களில் வனத்துறையினர் இந்த சுற்றுலா பயணத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பது வழக்கம்.

இப்படியிருக்க நேற்று மூன்றாவது முறையாக பில்லூர் அணை நிரம்பியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர் தேக்க பகுதியில் நீரோட்டம் அதிகமான காரணத்தால் பரிசல் இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாதுகாப்பு கருதி நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற இருந்த சூழல் சுற்றுலா ரத்து செய்யபட்டுள்ளது என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

பில்லூர் அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து இருந்ததால் கடந்த ஒரு மாதகாலமாக இந்த சூழல் சுற்றுலா நடைபெறாமல் இருந்தது. 

இந்நிலையில் இந்த வாரம் மீண்டும் சூழல் சுற்றுலா நடைபெற இருந்ததையடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் முன்பதிவை தொடங்கினர்.

ஆனால் மீண்டும் பில்லூர் அணை நிரம்பியதால் தற்போது மீண்டும் சூழல் சுற்றுலா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரத்து தொடர்பான தகவல் சுற்றுலா பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...