கோவை : சரவணம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட சின்னவேடம்பட்டி அருகே வாகனங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1250 கிலோ பான் மசாலா குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை : சரவணம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட சின்னவேடம்பட்டி அருகே வாகனங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1250 கிலோ பான் மசாலா குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாநகர காவல் எல்லையிலுள்ள கணபதி பகுதியையடுத்த சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது வீட்டருகே உள்ள வாகனத்தில் பான் மசாலா குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறைக்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்தது.
இதையடுத்து தகவலறிந்த சரவணம்பட்டி போலீசார், ஆய்வாளர் செல்வராஜ் அறிவுரையின் பேரிலும், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் அவர்களின் மேற்பார்வையிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1250 கிலோ பான்மசாலா குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து பான்மசாலா குட்கா பொருட்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவிற்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாநகர காவல் எல்லையிலுள்ள கணபதி பகுதியையடுத்த சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது வீட்டருகே உள்ள வாகனத்தில் பான் மசாலா குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறைக்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்தது.
இதையடுத்து தகவலறிந்த சரவணம்பட்டி போலீசார், ஆய்வாளர் செல்வராஜ் அறிவுரையின் பேரிலும், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் அவர்களின் மேற்பார்வையிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1250 கிலோ பான்மசாலா குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து பான்மசாலா குட்கா பொருட்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவிற்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.