இரண்டாவது முறையாக முழு கொள்ளவை எட்டியது பைக்காரா அணை: வினாடிக்கு 1773 கன அடி உபரி நீர் வெளியேற்றம்

நீலகிரி மாவட்டத்தில் தொடர் தென்மேற்கு பருவமழை காரணமாக இரண்டாவது முறையாக பைக்காரா அணை முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதனால் அணையில் வினாடிக்கு 1773 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறித்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை மிகவும் தாமதமாக துவங்கியது. இருப்பினும் இங்கு கடந்த ஆண்டினை விட 47 சதவீதம் மழை பெய்துள்ளது. இதனால் குடிநீர் மற்றும் மின்சாரத்திற்கு பயன்படும் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.



குறிப்பாக மழை துவங்குவதற்கு முன் 43 அடியாக இருந்த பைக்காரா அணை தொடர் மழை காரணமாக கடந்த மாதம் 97 அடியாக உயர்ந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 27 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மீண்டும் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் 110 அடியான பைக்காரர அணை மீண்டும் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1773 கன அடி உபரி நீர் அணையில் இருந்து இன்று முதல் வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக மசினகுடி, தெங்குமரஹாடா போன்ற பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...