கோவை : மேட்டுப்பாளையத்தில் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
கோவை : மேட்டுப்பாளையத்தில் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா உத்தரவின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் மேற்பார்வையில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் நடைபெற்றது.
இதில் மேட்டுப்பாளையம், சிறுமுகை,காரமடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

இதையடுத்து விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்து செல்லபட்டு பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வானது செண்டை மேளங்கள் முழங்க ஆரவாரத்துடன் நடைபெற்றது.

இந்த விசஜர்ன ஊர்வலத்தையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக 1000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர்.
அதேபோல பதட்டமான பகுதியான மேட்டுப்பாளையம் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெற்று சிலைகள் கரைக்கப்பட்டது.
கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா உத்தரவின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் மேற்பார்வையில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் நடைபெற்றது.
இதில் மேட்டுப்பாளையம், சிறுமுகை,காரமடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

இதையடுத்து விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்து செல்லபட்டு பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வானது செண்டை மேளங்கள் முழங்க ஆரவாரத்துடன் நடைபெற்றது.

இந்த விசஜர்ன ஊர்வலத்தையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக 1000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர்.
அதேபோல பதட்டமான பகுதியான மேட்டுப்பாளையம் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெற்று சிலைகள் கரைக்கப்பட்டது.