கோவையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் : போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது

கோவை : கோவையில் சுண்டப்பாளையம் அருகே பண்ணை வீட்டில் வைத்து முதியவர் ஒருவர், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் முதியவரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை : கோவையில் சுண்டப்பாளையம் அருகே பண்ணை வீட்டில் வைத்து முதியவர் ஒருவர், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் முதியவரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை சுண்டப்பாளையம் பகுதியைச் சுற்றியுள்ள பள்ளிகளில் சமூக செயற்பாட்டாளர்கள் குழந்தைகள் பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வில் "குட் டச்" "பேட் டச்" குறித்த தகவல்களை குழந்தைகளுக்கு பரிமாறினர். அப்போது விழிப்புணர்வு பெற்ற 2 சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை சமூக செயற்பாட்டாளர்களிடம் தெரிவித்தனர். இதில் ஒரு சிறுமிக்கு 11வயது, மற்றொரு சிறுமிக்கு 9 வயதாகும்.

இதனைத் தொடர்ந்து ஆசிரியர்களும் சமூக செயற்பாட்டாளர்களும், குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து பெருமாள்சாமி என்ற 72 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பண்ணை வீட்டில் வைத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் முதியவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...