கோவை : வாழ் நாள் முழுவதும் உத்தரவாத பென்சன் தரும் ஜீவன் சாந்தி திட்டத்தில் 114.83 கோடி ரூபாய்க்கு புது வணிகம் செய்யப்பட்டு உள்ளதாக எல்.ஐ.சி கோவை கோட்ட மேலாளர் நிக்கல்சன் தெரிவித்தார்.
கோவை : வாழ் நாள் முழுவதும் உத்தரவாத பென்சன் தரும் ஜீவன் சாந்தி திட்டத்தில் 114.83 கோடி ரூபாய்க்கு புது வணிகம் செய்யப்பட்டு உள்ளதாக எல்.ஐ.சி கோவை கோட்ட மேலாளர் நிக்கல்சன் தெரிவித்தார்.
எல்.ஐ.சி ஆப் இந்தியாவின் 63ம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருச்சி சாலையில் உள்ள அலுவலகத்தில் 63ம் ஆண்டு நிறைவையொட்டி போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனை எல்.ஐ.சி கோவை கோட்ட மேலாளர் நிக்கல்சன் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செப்டம்பர் 1 முதல் 7 வரை இன்சூரன்ஸ் வார விழாவாக கொண்டாடப்படுகிறது என தெரிவித்தார். 1956ல் 5 கோடி முதலீட்டில் துவங்கப்பட்ட எல்.ஐ.சி பொதுதுறை நிறுவனம் தற்போது 31.11 இலட்சம் கோடியுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது எனவும்
வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ற வகையில் பல்வேறு விதமான பாலிசிகள் மூலம் பயன் பெற்று வருவதாக தெரிவித்தார்.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் எல்.ஐ.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்றும் 26 கிளைகள், 20 துணை அலுவலகங்கள், 22 மினி அலுவலகங்கள்,1235 ஊழியர்கள், 11855 முகவர்களுடன் சேவையாற்றி வருவதாக தெரிவித்தார். மேலும், வரும் 2019-2020ம் ஆண்டு இலக்கு 1,92,000 பாலிசிகளும், 549 கோடி முதல் பிரீமியமும் வருவாய் என நிர்ணயம் செய்யபட்டுள்ளதாக கூறினார். வாழ்நாள் முழுவதும் உத்தரவாத பென்சன் தரும் ஜீவன் சாந்தி திட்டத்தில் மட்டும் 114.83 கோடி புது வணிகம் செய்துள்ளதாக தெரிவித்தார்.
எல்.ஐ.சி ஆப் இந்தியாவின் 63ம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருச்சி சாலையில் உள்ள அலுவலகத்தில் 63ம் ஆண்டு நிறைவையொட்டி போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனை எல்.ஐ.சி கோவை கோட்ட மேலாளர் நிக்கல்சன் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செப்டம்பர் 1 முதல் 7 வரை இன்சூரன்ஸ் வார விழாவாக கொண்டாடப்படுகிறது என தெரிவித்தார். 1956ல் 5 கோடி முதலீட்டில் துவங்கப்பட்ட எல்.ஐ.சி பொதுதுறை நிறுவனம் தற்போது 31.11 இலட்சம் கோடியுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது எனவும்
வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ற வகையில் பல்வேறு விதமான பாலிசிகள் மூலம் பயன் பெற்று வருவதாக தெரிவித்தார்.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் எல்.ஐ.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்றும் 26 கிளைகள், 20 துணை அலுவலகங்கள், 22 மினி அலுவலகங்கள்,1235 ஊழியர்கள், 11855 முகவர்களுடன் சேவையாற்றி வருவதாக தெரிவித்தார். மேலும், வரும் 2019-2020ம் ஆண்டு இலக்கு 1,92,000 பாலிசிகளும், 549 கோடி முதல் பிரீமியமும் வருவாய் என நிர்ணயம் செய்யபட்டுள்ளதாக கூறினார். வாழ்நாள் முழுவதும் உத்தரவாத பென்சன் தரும் ஜீவன் சாந்தி திட்டத்தில் மட்டும் 114.83 கோடி புது வணிகம் செய்துள்ளதாக தெரிவித்தார்.