திருப்பூர் : திருப்பூரில் கடைக்கு முன் நின்ற இரு சக்கர வாகனத்தை வாலிபர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் : திருப்பூரில் கடைக்கு முன் நின்ற இரு சக்கர வாகனத்தை வாலிபர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் குமரன் சாலையில் தனியார் ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் மணிமாறன். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை 8 மணி அளவில் தன் கடையை திறப்பதற்காக வந்து வண்டியை வெளியே சாவியுடன் நிறுத்திவிட்டு கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது அந்த வழியே செல்போனில் பேசியபடி சென்ற இளைஞர் ஒருவர் சாவியுடன் வண்டி நிற்பதைப் பார்த்து, திரும்ப வந்து வண்டியை அவசர அவசரமாக எடுத்துச் செல்வது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து மணிமாறன் கொடுத்த புகாரையடுத்து சிசிடிவி காட்சி ஆதாரங்களைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.