கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 10 லட்சம் விதைப்பந்துகள் வீசும் விழா தொடக்கம்

கோவை : கோவை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விதைப்பந்து வீசும் விழா தொடங்கியது. பள்ளி மாணவிகள் தங்கள் தயாரித்த 10 லட்சம் விதைப்பந்துகளை கல்லூரி மாணவர்களிடம் ஒப்படைத்தனர்.

கோவை : கோவை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விதைப்பந்து வீசும் விழா தொடங்கியது. பள்ளி மாணவிகள் தங்கள் தயாரித்த 10 லட்சம் விதைப்பந்துகளை கல்லூரி மாணவர்களிடம் ஒப்படைத்தனர்.



கடந்த மாதம் பள்ளி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து 10 லட்சம் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து, கோவையில் அமைந்துள்ள வனப்பகுதியில் நான்கு குழுக்களாக பிரிந்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம், மேட்டுப்பாளையம், பெரியநாய்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் விதைப்பந்துகளை வீச உள்ளனர். மழைக்காலம் என்பதால் நன்கு காய்ந்த விதைப்பந்துகள் முளைக்கும் எனவும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாவட்ட வனத்துறை அலுவலர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். மேலும், மாணவிகள் தங்கள் தயாரித்த விதைப்பந்துகளை கல்லூரி மாணவர்களிடம் ஒப்படைத்தனர்..



இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட வனத்துறை அலுவலர் வெங்கடேஷ், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கடந்த ஒரு மாதத்தில் உயிரிழந்த நான்கு யானைகளுக்கு குடற்புழு நோய் தாக்குதல் இருந்ததாகவும், யானை உயிரிழப்பு தடுக்க ஆய்வுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். 



மேலும், அப்பகுதியில் இரண்டு பேரை மிதித்துக் கொன்ற காட்டு யானையை கேரளா வனத்திற்குள் விரட்டியதாகவும், இனி அந்த யானையால் பிரச்சனை இருக்காது என்றும் யானைகளை கண்காணிக்க 360டிகிரி சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். சின்னதம்பி, விநாயகன் யானைகளைப் பிடித்ததால் தற்போது பயிர் சேதம் குறைந்துள்ளது. செங்கல் சூளைகள் மணல் எடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம். கோவை மாங்கரை எல்லை வாயிலாக கேரளாவிற்கு எந்தவிதமான மணல், ஜல்லி கடத்தப்படவில்லை என்றார்.

அதே போல, யானைகள் மீதான தாக்குதலை தடுக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். யானை தாக்கி உயிரிழந்த இரண்டு பேரும் மது அருந்தியிருந்ததாகவும், யானை செல்லும் பாதையில் நடமாடியதால் இதுபோன்ற விபரீதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...