கோவை : கோவையில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக வெளியான எச்சரிக்கையைத் தொடர்ந்து, பிரசித்தி பெற்ற முக்கிய கோவில்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை : கோவையில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக வெளியான எச்சரிக்கையைத் தொடர்ந்து, பிரசித்தி பெற்ற முக்கிய கோவில்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவானது சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, அனைத்து முக்கிய கோவில்களுக்கும் உயர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல, கோவையில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஷ்வ ஹிந்து பரிசத், பாரத்சேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

இப்படி கட்சியினர் மற்றும் பொது மக்களின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல, ஈச்சனாரி விநாயகர் கோவில், புலியகுளம் முந்தி விநாயகர் கோவில், மருதமலை கோவில், கோனியம்மன் கோவில் போன்ற சிறப்பு வாய்ந்த கோவில்களுக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கோவையில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் அனைத்துப் பகுதியிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் கோவையில் தீவிரவாத தாக்குதலுக்கு ரெட் அலார்ட் கொடுக்கப்பட்ட நிலையில், போலீசார் தரப்பில் இன்று மாவட்டம் முழுவதும் தீவிர பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவானது சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, அனைத்து முக்கிய கோவில்களுக்கும் உயர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல, கோவையில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஷ்வ ஹிந்து பரிசத், பாரத்சேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

இப்படி கட்சியினர் மற்றும் பொது மக்களின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல, ஈச்சனாரி விநாயகர் கோவில், புலியகுளம் முந்தி விநாயகர் கோவில், மருதமலை கோவில், கோனியம்மன் கோவில் போன்ற சிறப்பு வாய்ந்த கோவில்களுக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கோவையில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் அனைத்துப் பகுதியிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் கோவையில் தீவிரவாத தாக்குதலுக்கு ரெட் அலார்ட் கொடுக்கப்பட்ட நிலையில், போலீசார் தரப்பில் இன்று மாவட்டம் முழுவதும் தீவிர பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.