திருப்பூர் : மத்திய அரசின் திட்டங்கள் மக்களை வஞ்சிக்கும் வகையில் இருக்கக்கூடாது என திருப்பூரில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் : மத்திய அரசின் திட்டங்கள் மக்களை வஞ்சிக்கும் வகையில் இருக்கக்கூடாது என திருப்பூரில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செப்டம்பர் 15 அன்று தே.மு.தி.க. சார்பில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா திருப்பூர் காங்கயம் சாலையில் நடைபெற்றது . இதில், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவர்களின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு கால்கோள் நாட்டினர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- பிரேமலதா விஜயகாந்த் செப்டம்பர் 15 திருப்பூரில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டம் திருப்புமுனை பொதுக்கூட்டமாக அமையும். முதல்வர் வெளிநாடு பயணம் வெற்றி பெற தே.மு.தி.க. சார்பில் வாழ்த்தி வழி அனுப்பியதோடு, தமிழ்நாட்டிற்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகள் அரசியல் செய்து வருகிறது. பாதுகாப்பிற்காக மத்திய அரசின் இந்த நடவடிக்கையை காஷ்மீர் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
நாட்டின் பொருளாதார சரிவு வேதனை அளிக்கிறது. மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக இருந்தாலும், அது மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாக அமைந்துவிடக் கூடாது. இது குறித்து பிரதமரிடம் நேரடியாகவே சில கோரிக்கைகள் வைத்துள்ளது. ஜி.எஸ்.டி. வரி பிரச்சனைகளில் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவோம். மேலும், தெலுங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்க உள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் இதுபோன்ற உயர் பதவியை பெறுவது வரவேற்கத்தக்கது, என தெரிவித்தார்.