நீலகிரி : தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓர கடைகளில் இன்று முதல் பிளாஸ்டிக் மற்றும் குளிர்பான பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 68 வாட்டர் ஏ.டி.எம்.களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று துவக்கி வைத்தார்.
நீலகிரி : தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓர கடைகளில் இன்று முதல் பிளாஸ்டிக் மற்றும் குளிர்பான பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 68 வாட்டர் ஏ.டி.எம்.களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று துவக்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பிளாஸ்டிக் பாட்டிலில் விற்கப்படும் குடிநீர், குளிர்பான பாட்டில்கள் பயன்பாட்டிற்குப் பின் வீசப்படுவதால் ஏற்படும் தண்ணீர் மாசுபாடு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, செப்டம்பர் 1 முதல் மாவட்டத்திலுள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் குழு அமைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் தடை குறித்து விளக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது. இதனைத் தொடர்ந்து, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வாட்டர் ஏ.டி.எம்.மை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று துவக்கி வைத்தார். மேலும், நீர் நிலைகளைக் காப்பாற்ற உயர்நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவுகளை மாவட்ட நிர்வாகம் உறுதியாக பின்பற்றவுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ஒத்துழைப்பு கொடுக்க அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும், 5 ரூபாய்க்கு 1 லிட்டரும், 2 ரூபாய்க்கு 400 மில்லி லிட்டரும் தண்ணீர் வழங்கும்படி இந்த வாட்டர் ஏ.டி.எம். வடிமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.