கோவை : பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கோவை : பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி சார்பாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாணவ, மாணவிகள் ‘பிளாஸ்டிக்கை ஒழிப்போம்’ என்ற வாசகத்துடன் கூடிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி நின்று விழிப்புணர்வு மேற்கொண்டனர். அதுமட்டுமில்லாமல், ‘பிளாஸ்டிக் இல்லா நகரம் அமைப்போம், நம் வாழ்வில் இந்த நிமிடம் முதல் எல்லா நிகழ்வுகளிலும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்,’ என்று தங்கள் கைகளில் மை தடவி துணி பதாகைகளில் பூசி சபதம் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமை தாங்கினார். அவர் அனைவருக்கும் துணிகளைக் கொடுத்து, எழுதுகிற பேனாவிலிருந்து நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் அனைத்துப் பொருட்களிலும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்று மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை கூறினார். இந்த நிகழ்வில் கல்லூரி பேராசிரியர் கவிதா மற்றும் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி சார்பாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாணவ, மாணவிகள் ‘பிளாஸ்டிக்கை ஒழிப்போம்’ என்ற வாசகத்துடன் கூடிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி நின்று விழிப்புணர்வு மேற்கொண்டனர். அதுமட்டுமில்லாமல், ‘பிளாஸ்டிக் இல்லா நகரம் அமைப்போம், நம் வாழ்வில் இந்த நிமிடம் முதல் எல்லா நிகழ்வுகளிலும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்,’ என்று தங்கள் கைகளில் மை தடவி துணி பதாகைகளில் பூசி சபதம் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமை தாங்கினார். அவர் அனைவருக்கும் துணிகளைக் கொடுத்து, எழுதுகிற பேனாவிலிருந்து நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் அனைத்துப் பொருட்களிலும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்று மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை கூறினார். இந்த நிகழ்வில் கல்லூரி பேராசிரியர் கவிதா மற்றும் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
