கோவை : பேருந்தில் வயது முதிர்ந்த பயணி தவறவிட்ட ரூ. 37 ஆயிரத்தை நேர்மையுடன் திரும்ப ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநருக்கு போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் பாராட்டி பரிசு வழங்கினார்.
கோவை : பேருந்தில் வயது முதிர்ந்த பயணி தவறவிட்ட ரூ. 37 ஆயிரத்தை நேர்மையுடன் திரும்ப ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநருக்கு போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் பாராட்டி பரிசு வழங்கினார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை, பவானி கிளை நகரப் பேருந்து எண் TN 33 N 2990 வழித்தடம் 2 Bயில் நேற்று முன்தினம் பவானியில் இருந்து வள்ளிபுரத்தாம் பாளையம் செல்லும் பேருந்தில் சென்ற வயது முதிர்ந்த பயணி ரூ. 37,000-ஐ தவறவிட்டுச் சென்று விட்டார். இதை கண்டு, பேருந்து நடத்துநர் ஆறுமுகம், ஒட்டுநர் சீனிவாசன் 9924 ஆகிய இருவரும் பேருந்தில் கண்டெடுத்து கிளையில் ஒப்படைத்தனர். அவர்களது இந்த நேர்மையைப் பாராட்டி போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர், அவர்களை நேரில் அழைத்து சால்வை அணிவித்தும், பரிசுப் பொருட்கள் வழங்கியும் பாராட்டியுள்ளார். மேலும், தலைமை நிதி அலுவலர், பொதுமேலாளர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை, பவானி கிளை நகரப் பேருந்து எண் TN 33 N 2990 வழித்தடம் 2 Bயில் நேற்று முன்தினம் பவானியில் இருந்து வள்ளிபுரத்தாம் பாளையம் செல்லும் பேருந்தில் சென்ற வயது முதிர்ந்த பயணி ரூ. 37,000-ஐ தவறவிட்டுச் சென்று விட்டார். இதை கண்டு, பேருந்து நடத்துநர் ஆறுமுகம், ஒட்டுநர் சீனிவாசன் 9924 ஆகிய இருவரும் பேருந்தில் கண்டெடுத்து கிளையில் ஒப்படைத்தனர். அவர்களது இந்த நேர்மையைப் பாராட்டி போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர், அவர்களை நேரில் அழைத்து சால்வை அணிவித்தும், பரிசுப் பொருட்கள் வழங்கியும் பாராட்டியுள்ளார். மேலும், தலைமை நிதி அலுவலர், பொதுமேலாளர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.