65 அடி உயரம் 33 அடி அகலத்தில் சணல் பை தயாரிப்பு : கோவையில் புதிய உலக சாதனை

கோவை : பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியும் இணைந்து, 65 அடி உயரம், 33 அடி அகலத்தில் சணல் பை தயாரித்து புதிய உலக சாதனை மேற்கொள்ளப்பட்டது.


கோவை : பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியும் இணைந்து, 65 அடி உயரம், 33 அடி அகலத்தில் சணல் பை தயாரித்து புதிய உலக சாதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சணல் பையை உருவாக்குவதில், கண்பார்வையற்றோர் மற்றும் திருநங்கையர்கள் ஈடுபட்டனர். சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷனின் மற்றுமொரு சாதனையை மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி நிறுவனம் அதன் நிர்வாகமும் இணைந்து நிகழ்த்தியுள்ளன. இந்த நிகழ்ச்சியை கோவை மாநகர போலீஸ் துணை ஆணையர் (சட்டம் - ஒழுங்கு) எல். பாலாஜி சரவணன் துவக்கி வைத்தார். சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் எம்.கே. காந்தி, சந்திரன்ஸ் யுவ பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் சி.சிவநேசன், தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.சசிகலா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



பின்னர், சந்திரன்ஸ் யுவ பவுண்டேஷன் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.சசிகலா பேசுகையில், 'பிளாஸ்டிக் வேண்டாம், பசுமையை நோக்கி செல்வோம்’ ‘சுற்றுச் சூழலுக்கு நட்பாய் இருப்போம்‘ போன்றவை வலியுறுத்தப்பட்டன. சமுதாய பொறுப்பின் ஒரு பகுதியாக, இது அமைந்தது. 65 அடி உயரமுள்ள இந்த சணல் பை, 33 அடி அகலம் கொண்டது. சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷனை சேர்ந்த 9 பார்வையற்றோர் 5 மணி நேரத்தில் உருவாக்கினர். இந்த மிகப்பெரிய சணல் பையை உருவாக்குவதில் கின்னஸ் உலக சாதனை புரிய மேற்கொண்ட அரிய முயற்சியாகும். சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மேலாண்மை நிறுவனத்தின் பணியாளர்கள், மாணவர்கள் இதில் பங்கேற்று உதவினர். இந்த பை, அறிமுக நாளில் பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது," என்றார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...