கோவையில் மாணவர் ஒருவர் கல்லூரி மாடியிலிருந்து குதித்து தற்கொலை

கோவை : ஈச்சனாரி பகுதியிலுள்ள தனியார் கல்லூரி மாணவர், சக மாணவர்கள் முன்னிலையில் கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : ஈச்சனாரி பகுதியிலுள்ள தனியார் கல்லூரி மாணவர், சக மாணவர்கள் முன்னிலையில் கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை சுந்தராபுரம் பூங்காநகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷின் மகன் விஷ்ணு (19). இவர் ஈச்சனாரி அருகே உள்ள கற்பகம் கல்லூரியில் இளங்கலையில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களாகவே உடலில் ஏதோ குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மாணவர் சுமார் 15 நாட்களாக கல்லூரிக்கு செல்லவில்லை. இப்படியிருக்க மாணவர் விஷ்ணு இன்று கல்லூரிக்கு சென்ற நிலையில், ஆசிரியர்கள் விடுமுறை குறித்து விளக்கம் கேட்டதாகவும், பெற்றோரை வரவழைக்க சொல்லியதாகவும் மாணவர் தரப்பினர் தெரிவிக்கின்றனர். 

இந்த நிலையில், விஷ்ணு முதல் வகுப்பு முடிந்து இரண்டாம் வகுப்பு துவங்கும் முன் ஆசிரியர் வருவதற்குள் வகுப்பை விட்டு வெளியே வந்தார். இவர் திடீரென கல்லூரியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் அளித்தது. பின்னர், தகவலறிந்து வந்த மதுக்கரை போலீசார், உயிரிழந்த மாணவன் விஷ்ணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் தரப்பினர் ஆசிரியர் தரப்பினர் உறவினர்கள் என பலரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவையில், கல்லூரியில் வைத்து மாணவர் ஒருவர் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவ, மாணவியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...