காரமடையில் கிரிக்கெட் அகாடமியை திறந்து வைத்தார் கோவை மாவட்ட ஆட்சியர்

கோவை : கோவை புறநகரில் உள்ள காரமடையில் முதல்முறையாக இளைஞர்களுக்கான கிரிக்கெட் அகாடமி பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியர் ராசாமனி இன்று துவக்கி வைத்தார்.

கோவை : கோவை புறநகரில் உள்ள காரமடையில் முதல்முறையாக இளைஞர்களுக்கான கிரிக்கெட் அகாடமி பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியர் ராசாமனி இன்று துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் இளைஞர்களுக்கான கிரிக்கெட் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு தலைசிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு தரமான கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் வகையில், கோவை புறநகரில் முதல் முறையாக கிரிக்கெட் பயிற்சி அகாடமி இன்று துவக்கபட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் ஜ.பி.எல். மற்றும் டி.என்.பி.எல். கிரிக்கெட் வீரர்களான ராஜகோபால் சதீஷ், அருண் கார்த்திக் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர். 



இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் ராசாமணி கிரிக்கெட் விளையாடி அகாடமி பயிற்சியை துவக்கி வைத்தார். மேலும், இதே பள்ளியில் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், துப்பாக்கி பயிற்சி உள் விளையாட்டு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. அதனையும் அவர் பார்வையிட்டார்.

இந்த முகாமில் திறைமக்கு ஏற்றவாறு பேட்டிங்,பவுலிங்,பீல்டிங் பயிற்சியினை விளையாட்டில் ஏற்படுகிற மனஅழுத்தத்தை எதிர்கொள்வதற்கான பயிற்சி உணவுக்கட்டுப்பாடு ஓய்வு மற்றும் களைப்பு நீங்கப்பெறுதலுக்கான பயிற்சி உள்ளிட்டவை பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்களாக இருக்கும், மேலும் இளம் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் திறமைகளை கண்டறிந்து அதனை மேம்படுத்தி வெளிக்கொணர்ந்து தலைசிறந்த விளையாட்டு வீரர்களாக மாற்றுவதே அகாடமியின் குறிக்கோளாக ஆகும் என்றும்,இந்த பயிற்சி முகாமின் வாயிலாக கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த விளையாட்டு வீரர்களின் மத்தியில் நல்லிணக்கத்தை உருவாக்கிட விரும்புவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஜி.எஸ்.டி.ஆணையாளர் கோவிந்தராஜ், வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் செயலாளர் மற்றும் அறங்காவலர் டாக்டர் குணசேகரன் தாளாளர் சிங்காரவேல், இயக்குநர் சுரேஷ்குமார்,ராஜூ, முதல்வர் நாராயணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...